இனியபாரதி கைது - யார் இவர்?

இனியபாரதி கைது – யார் இவர்?

கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் இனியபாரதி கைது செய்யப்பட்டுள்ளார். யார் இவர் என பார்ப்போமானால், யுத்த காலத்தில் கருணா அணியின் அம்பாறை மற்றும் திருக்கோவில் பகுதிக்கு பொறுப்பாக இருந்தவருமான இனிய பாரதி என அழைக்கப்படும் கே. புஷ்பகுமார் எனும் கைது செய்யப்பட்டுள்ளர். குற்றப் புலனாய்வு பிரிவினரின் மற்றொரு அணியினர் புலனாய்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு இனிய பாரதியை ஞாயிற்றுக்கிழமை (06) அதிகாலை கைது செய்துள்ளனர். குறித்த கைது தொடர்பாக அம்பாறை மாவட்ட முன்னாள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் […]

Continue Reading
300 க்கு அதிகமானோர் கைது

300 க்கு அதிகமானோர் கைது

ஜூலை 4 ஆம் திகதி இரவு கந்தானை, ஜா-எல, வத்தளை மற்றும் றாகம ஆகிய பகுதிகளில் நடத்தப்பட்ட பெரிய அளவிலான கூட்டு நடவடிக்கையின் போது 300 க்கும் மேற்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்டனர். பொது பாதுகாப்பு அமைச்சின் கூற்றுப்படி, இலங்கை பொலிஸ், சிறப்பு அதிரடிப்படை (STF), இலங்கை இராணுவம் மற்றும் இலங்கை கடற்படையைச் சேர்ந்த பணியாளர்கள் ஒருங்கிணைந்த நடவடிக்கையில் ஈடுபட்டனர். இது பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளை, குறிப்பாக போதைப்பொருள் தொடர்பான குற்றங்களைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்டது. வன்முறை […]

Continue Reading
உலக பாரம்பரியத்திலிருந்து நீக்கப்படும் அபாயம்

உலக பாரம்பரியத்திலிருந்து நீக்கப்படும் அபாயம்

உலக பாரம்பரிய சின்னங்களிலிருந்து சிகிரியா மற்றும் காலி கோட்டை அகற்றப்படும் அபாயம் எழுந்துள்ளதாக புத்தசாசன மற்றும் சமய கலாசார அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஹினிதும சுனில் செனவி தெரிவித்துள்ளார். 1911ஆம் ஆண்டு காலி பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட தமிழ், சீன மற்றும் பாரசீக மும்மொழிகளிலான கல்வெட்டு மற்றும் பாணந்துறை விவாதம் தொடர்பான விசேட எழுத்து மூல ஆவணங்களும் சமீபத்தில் யுனெஸ்கோ அமைப்பால் உலக பாரம்பரிய சின்னமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. அதேவேளை சிகிரியா மற்றும் காலி கோட்டை ஆகியவற்றை அண்டிய பகுதிகளில் […]

Continue Reading
செம்மணியில் தோண்ட தோண்ட வருவது என்ன

செம்மணியில் தோண்ட தோண்ட வருவது என்ன

செம்மணி மனித புதைகுழியில் வியாழக்கிழமையும் (03)  சில மனித எலும்புக்கூடுகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரையில் 40 மனித எலும்புக்கூடுகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது என சட்டத்தரணி வி.எஸ்.நிரஞ்சன் தெரிவித்தார். செம்மணி மனித புதைகுழி அகழ்வுப் பணிகள் தொடர்பாக  ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே சட்டத்தரணி வி.எஸ்.நிரஞ்சன் இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழி வழக்கின் இரண்டாம் கட்டத்தின் எட்டாம் நாளான வியாழக்கிழமை (04) யாழ்ப்பாணம் நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் நடைபெற்றது. 34 மனித எச்சங்கள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. அதே […]

Continue Reading
கனடாவிலிருந்து இலங்கை வந்தவர் விபத்தில் பலி

கனடாவிலிருந்து இலங்கை வந்தவர் விபத்தில் பலி

கனடாவில் இருந்து விடுமுறைக்காக யாழ்ப்பாணம் வந்திருந்த பெண்ணொருவர் வீதி விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் உணவகம் கனடாவில் வசித்து வரும் இராஜரட்ணம் சுமதி (வயது 59) எனும் பெண்ணே உயிரிழந்துள்ளார். குறித்த பெண் கனடாவில் இருந்து விடுமுறைக்காக யாழ்ப்பாணம் வந்து கொடிகாமம் பகுதியில் தங்கியிருந்த நிலையில் , துவிச்சக்கர வண்டியில் வீதியில் பயணித்துக் கொண்டிருந்த வேளை டிப்பர் வாகனம் மோதி விபத்துக்குள்ளானார். விபத்தில் படுகாயமடைந்த பெண்ணை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதித்த […]

Continue Reading
வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு வந்த போதை

வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு வந்த போதை

விரைவு தபால் சேவை ஊடாக மிகவும் சூட்சுமான முறையில் மறைத்து பொதியிடப்பட்டு நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட 60 மில்லியன் ரூபாய்க்கும் அதிக பெறுமதியுள்ள போதைப்பொருட்களை சுங்கத் திணைக்களம் பறிமுதல் செய்துள்ளது. சுங்கத் திணைக்களத்தின் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் கடந்த 2024 ஜனவரி 1 முதல் இந்த வருடம் ஜூன் மாதம் வரை சர்வதேச விரைவு தபால் சேவை ஊடாக அமெரிக்கா, கனடா மற்றும் மலேசியாவிலிருந்து பெறப்பட்ட போதைப்பொருள் இருப்பதாக சந்தேகிக்கப்படும் பல பொதிகளை சோதனை நடவடிக்கைகளுக்காக தடுத்து வைத்துள்ளனர். […]

Continue Reading
இலங்கையில் சிறுவர்களுக்கு ஆபத்து

இலங்கையில் சிறுவர்களுக்கு ஆபத்து

திடீர் விபத்துகளில் சிக்கும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையின் சிறுவர் வைத்தியரான பேராசிரியர் ருவந்தி பெரேரா தெரிவித்தார். தெற்காசிய நாடாக இலங்கை மிக உயர்ந்த மட்டத்தில் உள்ளது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக, நம் நாட்டில் உள்ள தரவுகளைப் பார்க்கும்போது, ​​விபத்துகளால் சிறுவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. நாங்கள் 16 வயது வரை சிறுவர்களாக பார்க்கிறோம். இதை பெரும்பாலும் இரு வெவ்வேறு வயதுக் குழுக்களாக பிரிக்கலாம். 2 முதல் 3 வயது வரையிலான […]

Continue Reading
Z புள்ளி அதிகமாயின் வெளிநாட்டில் படிக்கலாம்

Z புள்ளி அதிகமாயின் வெளிநாட்டில் படிக்கலாம்

க.பொ.த உயர்தரப் பரீட்சையில் (உ/த) அதிக தரங்களுடன் சித்தியடைந்த மாணவர்களுக்கு வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் முதல் பட்டப்படிப்பைப் பயில வாய்ப்புகளை வழங்கும் நோக்கில் புலமைப்பரிசில் திட்டத்தை செயல்படுத்த அமைச்சரவை ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.  அரசாங்கத்தின் கூற்றுப்படி, 2025 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில் உயர்தரப் பரீட்சையின் முக்கிய பாடப் பிரிவுகளில் அதிக Z-புள்ளி பெற்ற மாணவர்களுக்கு வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் கல்வி கற்க வாய்ப்புகளை வழங்குவதற்காக ரூ. 200 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. ‘நாகரிக குடிமக்கள் மேம்பட்ட மனித வளங்களை’ உருவாக்கும் அரசாங்கத்தின் […]

Continue Reading
இலங்கைக்கு வரவுள்ள புதிய சேவை

இலங்கைக்கு வரவுள்ள புதிய சேவை

இலங்கையில் தற்போது ஸ்டார்லிங் இணைய சேவை செயற்பாட்டை ஆரம்பித்துள்ளதாக எலான் மஸ்க் தனது எக்ஸ் தள பதிவில் அறிவித்தார். ஸ்டார்லிங் இணைய சேவை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது எக்ஸ் பக்கத்தில் இந்த இணைய சேவையின் உரிமையாளரான எலான் மஸ்க்கிற்கு நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, அனைத்து இலங்கையர்களுக்கும் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணைய சேவையை வழங்கியமைக்கு நன்றி தெரிவிக்கிறேன். இது நமது நாட்டின் டிஜிட்டல் மாற்றத்தில் ஒரு வெற்றிப்படி என்பது குறிப்பிடத்தக்கது. […]

Continue Reading
இலங்கைக்கு வருகிறார் ஷாருக்கான்

இலங்கைக்கு வருகிறார் ஷாருக்கான்

City of Dreams Sri Lanka திட்டத்தின் தொடக்க விழாவில் பொலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. City of Dreams Sri Lanka ஒரு அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளது. ஜான் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் (JKH) மற்றும் மெல்கோ ரிசார்ட்ஸ் & என்டர்டெயின்மென்ட் ஆகியவற்றின் தனித்துவமான திட்டமான இது, அனைத்து வசதிகளையும் கொண்ட தெற்காசியாவின் முதல் முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்ட சுற்றுலா ஹோட்டல் வளாகமாகவும், தனியார் துறையால் செய்யப்பட்ட மிகப்பெரிய […]

Continue Reading